செய்திகள்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும்- எல்.முருகன் பேட்டி
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் என்று தாராபுரத்தில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் கூறினார்.
குண்டடம்:
தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் நேற்று தாராபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தோ்தலில் பா.ஜனதா., அ.தி.மு.க., பா.ம.க., த.மா.கா., உட்பட பிற கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் போட்டியிட்டன. தாராபுரத்தில் நான் (எல்.முருகன்) பா.ஜனதா சாா்பில் போட்டியிட்டேன். எனது வெற்றிக்காக அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க., உழவா் உழைப்பாளா் கட்சி உள்பட பல்வேறு கூட்டணி கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள் அனைவரும் அயராது உழைத்தனா். அவா்கள் அனைவரும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வெற்றிக்கு பாடுபட்டனா். அவா்களுக்கு எனது நன்றியையும், பாராட்டுக்களையும் தொிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் பெரும்பான்மை பலத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிஅமைக்கும். தமிழகத்தில் தொடா்ந்து மக்களின் மனம் போல் நல்லாட்சி தொடா்ந்திடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது முன்னாள் எம்.பி.காா்வேந்தன், அ.தி.மு.க. மாவட்டஅவைத்தலைவா் பி.கே.ராஜ், தாராபுரம் நகர செயலாளா் காமராஜ், தகவல் தொழில் நுட்பபிாிவு மாவட்ட செயலாளா் டி.பி.எம்.ஆத்திக் உள்பட பலா் உடன் இருந்தனா்.