செய்திகள்
அனைத்து மாவட்டங்களிலும் பா.ம.க. பொதுக்குழு கூட்டம்
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடி நிலையிலான களப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வருகிற 25-ந்தேதி அனைத்து மாவட்டங்களிலும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை:
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடி நிலையிலான களப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நிலையிலான மாவட்ட வாரியாக இந்த கூட்டம் நடத்தப்படும். வரும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பணிகள் குறித்த ஆலோசனையும் இந்த கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள், வாக்குச்சாவடி நிலையிலான களப்பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வருகிற 25-ந்தேதி (வியாழக்கிழமை) அனைத்து மாவட்டங்களிலும் காலை 11 மணிக்கு சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர்கள் நிலையிலான மாவட்ட வாரியாக இந்த கூட்டம் நடத்தப்படும். வரும் சட்டசபை தேர்தலை சந்திப்பதற்காக இதுவரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பணிகள் குறித்த ஆலோசனையும் இந்த கூட்டத்தில் நடத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.