செய்திகள்
சென்னையில் நாளை மதிமுக உயர்நிலை குழுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்பு
சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலை குழுக்கூட்டத்தில் வைகோ கலந்து கொள்கிறார்.
சென்னை:
சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம் நாளை காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து 10 மணியளவில் மாவட்டச் செயலாளர்கள் உயர்நிலை ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனை குழு, அரசியல் ஆய்வு மைய குழு உறுப்பினர்களின் கூட்டமும் நடைபெறுகிறது.
ம.தி.மு.க. அவை தலைவர் திருப்பூர் துரைசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூட்டத்தில் கலந்து கொள்கிறார். வருகிற சட்டமன்ற தேர்தல் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
தி.மு.க. கூட்டணியில் எத்தனை இடங்கள் கேட்பது? பிரசார வியூகங்களை வகுப்பது எப்படி? என்பது பற்றியும் நாளை நடைபெறும் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.