செய்திகள்
மரணம்

மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலி

Published On 2021-01-04 01:34 GMT   |   Update On 2021-01-04 01:34 GMT
மாடியில் இருந்து தவறி விழுந்து கட்டிடத்தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சென்னை ராயப்பேட்டை தவுடியா மடம் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில், கட்டிடம் புதுப்பிக்கும் வேலை நடந்து வருகிறது. இந்த கட்டிட வேலையில் பல்லாவரத்தை சேர்ந்த பாஸ்கர் (வயது 47) என்பவர் ஈடுபட்டிருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கட்டிட வேலையில் ஈடுபட்டு இருந்த பாஸ்கர் திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு, ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ராயப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News