செய்திகள்
திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று
தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சேலம் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம்:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சேலம் திமுக எம்.பி.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் கொரோனா சோதனை செய்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இந்த நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட சேலம் திமுக எம்.பி.பார்த்திபனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் கொரோனா சோதனை செய்து கொள்ள கேட்டுக்கொண்டுள்ளார்.