செய்திகள்
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

இளைஞர்கள் பாஜகவிற்கு அதிகமாக வாக்களிப்பார்கள்- முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை

Published On 2020-08-27 09:20 GMT   |   Update On 2020-08-27 09:20 GMT
வரும் தேர்தலில் தமிழக இளைஞர்கள் அதிகமாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள் என்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கூறினார்.
கோவை:

கோவை சித்தாப்புதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

புதிய கல்விக்கொள்கையில் இந்தி திணிப்பு இல்லை. தமிழர்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது.

வரும் தேர்தலில் தமிழக இளைஞர்கள் அதிகமாக பாஜகவிற்கு வாக்களிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நேற்று முன்தினம் பா.ஜனதாவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News