செய்திகள்
கோப்பு படம்

சென்னையில் 1,065 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்

Published On 2020-08-02 18:14 GMT   |   Update On 2020-08-02 18:14 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 879 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் உள்மாநிலத்தில் வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 811 பேர். 

விமான நிலைய கண்காணிப்பில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 15 பேர், உள்நாட்டில் இருந்து வந்தவர்கள் 11 பேர் ஆவர்.

மேலும், சாலைமார்க்கமாக வெளிமாநிலங்களில் இருந்து சொந்த மாவட்டம் வந்தவர்களில் 38 பேர் ஆகும்.

இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 57 ஆயிரத்து 613 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 56 ஆயிரத்து 998 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1 லட்சத்து 96 ஆயிரத்து 483 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 4,132 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர் - 73
செங்கல்பட்டு - 446
சென்னை - 1,065
கோவை - 167
கடலூர் - 144
தர்மபுரி - 17
திண்டுக்கல் - 97
ஈரோடு - 22
கள்ளக்குறிச்சி - 33
காஞ்சிபுரம் - 393
கன்னியாகுமரி - 200
கரூர் - 28
கிருஷ்ணகிரி - 59
மதுரை - 178
நாகை - 16
நாமக்கல் - 28
நீலகிரி - 14
பெரம்பலூர் - 27
புதுக்கோட்டை - 125
ராமநாதபுரம் - 45
ராணிப்பேட்டை - 167
சேலம் - 134
சிவகங்கை - 45
தென்காசி - 95
தஞ்சாவூர் - 91
தேனி - 309
திருப்பத்தூர் - 70
திருவள்ளூர் - 317
திருவண்ணாமலை - 142
திருவாரூர் - 45
தூத்துக்குடி - 271
திருநெல்வேலி - 201
திருப்பூர் - 40
திருச்சி - 136
வேலூர் - 173
விழுப்புரம் - 99
விருதுநகர் - 337
விமான நிலைய கண்காணிப்பு
வெளிநாடு - 15
உள்நாடு - 11
ரெயில் நிலைய கண்காணிப்பு - 0

மொத்தம் - 5,875
Tags:    

Similar News