செய்திகள்
அமைச்சர் விஜயபாஸ்கர்

பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும்- அமைச்சர் விஜயபாஸ்கர்

Published On 2020-07-18 10:31 GMT   |   Update On 2020-07-18 10:31 GMT
பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். பி.சி.ஆர். கருவிகள் தமிழகத்தில் தேவையான அளவு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News