செய்திகள்
தமிழக அரசு

கொரோனா தடுப்பு பணிக்காக 3 மாவட்டத்திற்கு சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு

Published On 2020-05-20 12:10 GMT   |   Update On 2020-05-20 12:10 GMT
கொரோனா தடுப்பு பணிக்காக காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை:

காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு சிறப்பு  அதிகாரிகளாக உதயச்சந்திரன், அன்பு ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு -  உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்., டி.எஸ். அன்பு ஐ.பி.எஸ்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்திற்கு பாஸ்கரன், வனிதா ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர் - பாஸ்கரன் ஐ.ஏ.எஸ்., வனிதா ஐ.பி.எஸ்.

காஞ்சிபுரம்  

காஞ்சிபுரம்  மாவட்டத்திற்கு சுப்பிரமணியன், பவானீஸ்வரி ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் -  சுப்பிரமணியன் ஐ.ஏ.எஸ்., பவானீஸ்வரி ஐ.பி.எஸ்


Tags:    

Similar News