செய்திகள்
மாவட்ட கலெக்டர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை
கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை:
கொரோனா வைரஸ் பரவுவது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளதால் இது தொடர்பாக எடுக்க வேண்டி முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துவதற்காக மாவட்ட கலெக்டர்களுடன் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (6-ந் தேதி) காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
தலைமைச் செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் கானொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.