செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருச்சியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
மலைக்கோட்டை:
திருச்சி கீழேதேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வமணி (வயது 22). இவர் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை அழைத்ததுடன், தனது வீட்டின் பின் பகுதிக்கு அழைத்து சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி அழுது கொண்டே சென்று தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். உடனே அவரது தாய் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி செல்வமணியை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.