செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை- மேற்குவங்க வாலிபர் கைது

Published On 2020-02-07 10:08 GMT   |   Update On 2020-02-07 10:08 GMT
கொடைக்கானலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மேற்குவங்க வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கொடைக்கானல்:

கொடைக்கானல் பகுதியில் மேற்குவங்க மாநிலம் தானா பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

சம்பவத்தன்று கொடைக்கானல் கல்லுக்குழி பகுதியில் இவர்கள் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தானா பகுதியை சேர்ந்த வாலிபர் இம்தாத்அலி(24) என்பவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுபற்றி அந்த சிறுமி சகமாணவிகளிடம் கூறியுள்ளார். இதைதொடர்ந்து அவரது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு இம்தாத்அலியை மடக்கி பிடித்தனர்.

பின்பு அவருக்கு தர்மஅடி கொடுத்து கொடைக்கானல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து வாலிபர் இம்தாத்அலியை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான இம்தாத்அலி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News