செய்திகள்
ஈவிகேஎஸ் இளங்கோவன்

பெரியாரை பற்றி தெரியாமல் ரஜினி உளறுகிறார்- ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து

Published On 2020-01-24 11:44 GMT   |   Update On 2020-01-24 11:44 GMT
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்தின் சர்ச்சை பேச்சுக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

பெரியாரின் பேரனும் முன்னாள் காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பெரியார் பற்றிய ரஜினியின் கருத்துக்கு இதுவரை பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். இன்று ரஜினியின் சர்ச்சை பேச்சுக்கு அவர் பதிலளித்தார். அப்போது கூறியதாவது:-

நினைத்தாலே இனிக்கும் சினிமாவில் நடித்த போது ரஜினி மனநிலை பாதிக்கப்பட்டார். அப்போது நடுத்தெருவில் பத்திரிக்கையாளர்களை கூட தாக்கினார்.

மனநிலை பாதிப்புக்காக சிகிச்சையும் எடுத்துக் கொண்டார். அந்த சிகிச்சையை முழுமையாக எடுத்துக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். அதனால் தான் அவர் பெரியார் பற்றி உளறி இருக்கிறார்.

தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ பெரியார் தான் காரணம் என்பதை அவர் அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை.

பெரியார் ஆயிரம் வி‌ஷயங்கள் செய்து இருப்பார். ஆயிரம் கருத்துக்களை சொல்லி இருப்பார். மக்களுக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டு தேவைற்றதை விட்டு விடலாம்.

பெரியாரை முழுமையாக கொச்சைப்படுத்துவது தமிழர்களை கொச்சைப்படுத்துவது போன்றதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News