செய்திகள்
மரணம்

கோவையில் மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி

Published On 2019-08-23 04:50 GMT   |   Update On 2019-08-23 04:50 GMT
கோவையில் மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுஜித் கோரா. இவர் கோவை ரெங்கே கவுடர் வீதியில் குடும்பத்துடன் தங்கி இருந்து தங்க நகை பட்டறை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகள் சினேகா கோரா (வயது 7). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.

சினேகா கோரா கடந்த 5 நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவரை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை. சம்பவத்தன்று வீட்டில் இருந்த சினேகா கோராவின் உடல் நிலை திடீரென மோசமானது.

இதனையடுத்து அவரை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சினேகா கேரளாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News