செய்திகள்
உசிலம்பட்டி அருகே கள்ளக்காதலனுடன் வசித்த கர்ப்பிணி வெட்டிக்கொலை- கணவர் ஆத்திரம்
உசிலம்பட்டி அருகே வேறு ஒருவருடன் குடும்பம் நடத்திய பெண்ணை கணவர் வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
உசிலம்பட்டி அருகே உள்ள வடிவேல்கரையைச் சேர்ந்த போஸ் மகன் வடிவேல் (வயது 30). இவரது மனைவி அம்சத் (22).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் (25) என்பவருடன் அம்சத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறியது.
விவரம் தெரியவந்ததும் வடிவேல், அம்சத்தை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இருப்பினும் கள்ளத்தொடர்பை அம்சத் கைவிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலன் மதனுடன் அம்சத் சென்று விட்டார். அவர்கள் செக்கானூரணி பசும்பொன் தெருவில் தனி வீட்டில் வசித்து வந்தனர்.
மனைவி பிரிந்து சென்றதோடு, கள்ளக்காதலனோடு தனிக்குடித்தனம் நடத்துவது வடிவேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு 11.30 மணிக்கு உறவினருடன், அம்சத் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் அம்சத் மற்றும் மதன் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை வடிவேல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அம்சத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் வடிவேல் தப்பியோடி விட்டார்.
பலத்த காயமடைந்த மதன் கூக்குரல் எழுப்பியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் மதனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று காலை வடிவேலை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட அம்சத் 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.
உசிலம்பட்டி அருகே உள்ள வடிவேல்கரையைச் சேர்ந்த போஸ் மகன் வடிவேல் (வயது 30). இவரது மனைவி அம்சத் (22).
இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகின்றன. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் செக்கானூரணி அருகே உள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் மதன் (25) என்பவருடன் அம்சத்துக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளத்தொடர்பாக மாறியது.
விவரம் தெரியவந்ததும் வடிவேல், அம்சத்தை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இருப்பினும் கள்ளத்தொடர்பை அம்சத் கைவிடவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து கள்ளக்காதலன் மதனுடன் அம்சத் சென்று விட்டார். அவர்கள் செக்கானூரணி பசும்பொன் தெருவில் தனி வீட்டில் வசித்து வந்தனர்.
மனைவி பிரிந்து சென்றதோடு, கள்ளக்காதலனோடு தனிக்குடித்தனம் நடத்துவது வடிவேலுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. நேற்று இரவு 11.30 மணிக்கு உறவினருடன், அம்சத் வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் அம்சத் மற்றும் மதன் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை வடிவேல் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த அம்சத் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர் வடிவேல் தப்பியோடி விட்டார்.
பலத்த காயமடைந்த மதன் கூக்குரல் எழுப்பியதை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அவர்கள் மதனை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். செக்கானூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இன்று காலை வடிவேலை கைது செய்தனர். கொலை செய்யப்பட்ட அம்சத் 4 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.