செய்திகள்
காதல் ஜோடி

கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி தர்மபுரி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்

Published On 2019-07-17 12:52 GMT   |   Update On 2019-07-17 12:52 GMT
பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த கொண்ட கிருஷ்ணகிரியை சேர்ந்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தர்மபுரி எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.
தர்மபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் பணங்காமட்லு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் விஜய் (வயது 25), கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் ஹரிப் என்பவரின் மகள் ஹர்ஷியா பானு (19) என்பவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் ஹர்ஷியா பானு வீட்டில் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இதனால் ஹர்ஷியா பானு மற்றும் விஜய் இருவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் குன்னத்தூரில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து இருவரும் பாதுகாப்புக்கோரி தர்மபுரி மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்தனர். அந்த மனுவில் ஹர்ஷியா பானு கூறியிருப்பதாவது:-

நான் எங்கள் பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை முழு மனதுடன் காதலித்து வருகிறேன். ஆனால் இதற்கு எங்கள் வீட்டின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே நாங்கள் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டோம். எனவே எங்களுக்கு, எனது பெற்றோரிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
Tags:    

Similar News