குடிபோதையில் தகராறு - கணவனை ஊதுகுழலால் அடித்து கொன்ற மனைவி
வடமதுரை:
திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது42). இவரது மனைவி பஞ்சவர்ணம். இவர்களுக்கு 3 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கல் உடைக்கும் தொழிலாளியான முருகேசன் கல்பட்டிசத்திரம் அருகே வத்தமணியகாரன்பட்டியில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்தார். முருகேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
நேற்று இரவு குடிபோதையில் வந்த முருகேசன் பஞ்சவர்ணத்திடம் தகராறு செய்துள்ளார். மேலும் தனது மகளை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பஞ்சவர்ணம் முருகேசனை அருகில் இருந்த ஊதுகுழலால் தலையில் சரமாரியாக தாக்கினார்.
இதில் நிலைதடுமாறி முருகேசன் சரிந்து விழுந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே முருகேசன் உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவனை கொலை செய்த பஞ்சவர்ணத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.