செய்திகள்

புளியங்குடி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண் கற்பழிப்பு

Published On 2019-06-23 16:57 GMT   |   Update On 2019-06-23 16:57 GMT
புளியங்குடி அருகே திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை கற்பழித்த 2 குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.
புளியங்குடி:

புளியங்குடி அருகே உள்ள தலைவன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது39). இவர் டேங்கர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் உதயகுமார் வீட்டருகே உள்ள அவரது உறவு பெண்ணிடம் அவர் சகஜமாக பேசி பழகினார்.

இதில் அவர்களுக்கிடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. எப்படியும் உன்னை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பிணியானார். இதை வெளியே சொல்லக்கூடாது என்று உதயகுமார் மிரட்டியதால் அந்த இளம்பெண்ணும் கர்ப்பிணியான விஷயத்தை வெளியே கூறவில்லை. 

சமீபத்தில் அந்த இளம் பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவரது பெற்றோர் அந்த இளம்பெண்ணை டாக்டரிடம் அழைத்து சென்றனர். டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாக கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர்கள் மகளிடம் விசாரித்தனர். அப்போது உதயகுமார் திருமண ஆசை வார்த்தை காட்டி கற்பழித்து ஏமாற்றியது தெரியவந்தது.

இதுகுறித்து அந்த இளம்பெண் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் உதயகுமார் அந்த இளம்பெண்ணை கற்பழித்து, 8 மாத கர்ப்பிணியாக்கியது தெரியவந்தது. உடனடியாக போலீசார் உதயகுமாரை கைது செய்தார்கள்.

இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியான அந்த இளம்பெண்ணுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News