செய்திகள்

கோவை மத்திய சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி

Published On 2019-06-19 06:27 GMT   |   Update On 2019-06-19 06:27 GMT
கோவை மத்திய சிறையில் கண்ணாடி டம்ளரை உடைத்து விழுங்கி கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை:

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 53).

இவர் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் இருந்த பிரகாஷ் திடீரென தற்கொலை செய்யும் நோக்கில் கண்ணாடி டம்ளரை உடைத்து கண்ணாடி துண்டுகளை வாய்க்குள் போட்டு முழுங்கினார். பின்னர் வயிறு வலியால் அவதிப்பட்டார்.

இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சிறை அதிகாரிகள் விரைந்து வந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறைக்கைதிகள் வார்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு வைத்து பிரகாசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

ஜெயில் வளாகத்துக்குள் சிறை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News