search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prisoner suicide attempt"

    • பழனிசாமி (வயது 48). இவர் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
    • அவர் இருந்த அறையில் தனது சட்டையை கழற்றி அங்குள்ள கம்பியில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவர் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பழனிசாமி அவர் இருந்த அறையில் தனது சட்டையை கழற்றி அங்குள்ள கம்பியில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறை வார்டன்கள் அவரை மீட்டு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் விசாரணை நடத்தினார். அதில், பழனிசாமி மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    ராயபுரம்:

    மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம், சின்ன காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சிறையில் இருந்த முருகன் திடீரென தனது உள்ளாடையால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட சிறை அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனியின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    கடலூர் மத்திய சிறையில் இன்று காலை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    கடலூர்:

    கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர் அன்சர்மீரான் (வயது 29). இவர் ஐ.எஸ். என்ற தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் சிறையை தகர்த்து அன்சர்மீரானை கடத்த பயங்கரவாத அமைப்பு சதித்திட்டம் தீட்டுவதாக மத்திய புலனாய்வு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். அவர் அடைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவும், பகலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி நாகை மாவட்டம் மயிலாடுதுறை நீடூரை சேர்ந்தவர் மன்சூர்அலி (வயது 52) என்பவர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் திடீரென்று சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    கடலூர் மத்திய சிறையில் இன்று காலை மேலும் ஒரு கைதி தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதுபற்றி விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டம் மாம்பழம்பட்டு பகுதியை சேர்ந்த முருகன்(வயது 37) கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராய வழக்கில் விழுப்புரம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

    இன்று காலை அறையில் அவர் திடீரென்று தான் அணிந்திருந்த ஜட்டியை எடுத்து கழுத்தில் இறுக்கி தற்கொலை செய்ய முயன்று மயங்கி விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த ஜெயிலர் இதைபார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

    உடனே அவர்கள் விரைந்து வந்து மயங்கி கிடந்த முருகனை மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து முதுநகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார், சிறைத்துறை அதிகாரிகளும் கைதி முருகன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தசம்பவம் அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மதுரையில் மத்திய சிறை கைதி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை கரிமேடு எம்.கே. புரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் பூமிநாதன். இவரது மகன் ஆதிபரமேஸ்வரன் (வயது20). வழக்கில் கைதாகி மத்திய சிறையில் விசாரணை கைதியாக உள்ளார்.

    கடந்த சில நாட்களாக தனக்கு உடல்நலம் சரியில்லை என கூறிய ஆதிபரமேஸ்வரன் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு சிறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆனால் அங்குள்ள போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை ஆதிபரமேஸ்வரன் சிறையில் உள்ள டியூப் லைட்டை உடைத்து தனது கையை கீறிக்கொண்டார். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

    சிறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அப்போது தன்னை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாவிட்டால் கழுத்தில் குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொள்ளபோவதாக ஆதிபரமேஸ்வரன் மிரட்டினார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் விசாரணை நடத்தி ஆதி பரமேஸ்வரன் மீது தற்கொலைக்கு முயன்றதாக வழக்குப்பதிவு செய்தனர்.

    நெல்லை மாவட்டம் மேலபாளையத்தை அடுத்த பிராஞ்சேரி வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் பேச்சி (72). வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பேச்சி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    ×