search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மத்திய சிறையில்ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி
    X

    சேலம் மத்திய சிறையில்ஆயுள் தண்டனை கைதி தற்கொலை முயற்சி

    • பழனிசாமி (வயது 48). இவர் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார்.
    • அவர் இருந்த அறையில் தனது சட்டையை கழற்றி அங்குள்ள கம்பியில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

    சேலம்:

    சேலம் கந்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48). இவர் சேலம் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று பழனிசாமி அவர் இருந்த அறையில் தனது சட்டையை கழற்றி அங்குள்ள கம்பியில் கட்டி தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்ட சிறை வார்டன்கள் அவரை மீட்டு ஜெயிலில் உள்ள மருத்துவமனையில் சிகிக்சைக்காக சேர்த்தனர். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வினோத் விசாரணை நடத்தினார். அதில், பழனிசாமி மன அழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மத்திய சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×