செய்திகள்
ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்

மீன்பிடி தடை காலம் முடிந்தது - ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆயிரம் பேர் மீன்பிடிக்க சென்றனர்

Published On 2019-06-15 04:10 GMT   |   Update On 2019-06-15 04:10 GMT
மீன்பிடி தடை காலம் நேற்றுடன் முடிந்ததையொட்டி, ராமேசுவரம் மீனவர்கள் 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம்:

மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை மீன் பிடிக்க மத்திய அரசு தடை விதித்து வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தடை கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இன்றி தவித்தனர்.

இதன் காரணமாக அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு கூலி வேலைக்கு சென்றனர். சிலர் உள்ளூரிலேயே தங்களுக்கு கிடைத்த வேலையை செய்து வந்தனர்.

மேலும் மீன்பிடி தடை காலத்தின் போது விசைப்படகுகள், வலைகள், மீன்பிடி சாதனங்களை பழுது பார்க்கும் பணியிலும் மீனவர்கள் ஈடுட்டனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேசுவரம் துறைமுகமும் வெறிச்சோடியது.

தடை காலத்தில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் நாட்டுப்படகில் சென்று மீன் பிடிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்து வந்தனர். இதன் மூலம் கிடைத்த மீன்களுக்கு சந்தையில் கடும் கிராக்கி ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்றுடன் (ஜூன் 14) 60 நாட்கள் மீன்பிடி தடை காலம் முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து கடலுக்கு செல்ல இன்று காலை ராமேசுவரம் மீன்வளத்துறை அலுவல கத்தில் டோக்கன் வழங்கப்படும் என அறி விக்கப்பட்டிருந்தது. ஆனால் இதனை பொருட்படுத்தாத 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மாலையே 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடலுக்கு ஆர்வத்துடன் மீன்பிடிக்க சென்றனர். இன்று அதிகாலை முறையாக டோக்கன் வழங்கப்பட்டவுடன் மேலும் 200 படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு சென் றனர்.

இதன் காரணமாக ராமேசுவரம் துறைமுகம் மீண்டும் பரப்பானது. 60 நாட்கள் கழித்து கடலுக்கு செல்வதால் அதிகமான மீன்கள் கிடைக்கும் என மீனவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Tags:    

Similar News