திருவள்ளூர் அருகே தூக்கில் வாலிபர் பிணம் - கொலை செய்யப்பட்டாரா?
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த அரண்வாயல் பகுதியில் கூவம் ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபர் பிணமாக கிடந்தார். இதுபற்றி செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மணவாளநகர் இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் பிணமாக கிடந்தது. திருவாலங்காடு அடுத்த பழையனூர் கிராமத்தை சேர்ந்த அமுல் அந்தோணி ராஜ் (25) என்பது தெரியவந்தது. அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்து உள்ளார்.
அந்தோனிராஜ் தூக்கில் பிணமாக கிடந்தபோது தரையில் அவரது கால் முழுவதும் இருந்தது. எனவே அவரை யாரேனும் அடித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.