செய்திகள்

பொன்னேரி பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்

Published On 2019-02-08 09:11 GMT   |   Update On 2019-02-08 09:11 GMT
இரவில் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பொன்னேரி பஸ்நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரி பஸ் நிலையத்தில் இருந்து செங்குன்றம், பழவேற்காடு, மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஆகிய பகுதிகளுக்கு தினந்தோறும் 50-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் பொன்னேரி பஸ்நிலையத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் செல்லவில்லை.

இதனால் சென்னை புறநகர் பகுதிகளுக்கு வேலைக்கு சென்று திரும்பிய பயணிகள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் அவதி அடைந்தனர். ஆத்திரம் அடைந்த பயணிகள் பஸ் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு பொன்னேரி போலீசார், போக்குவரத்து அதிகாரிகளிடம் பேசி இரவு நேரத்தில் கூடுதலாக பஸ்கள் இயக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து பயணிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் பொன்னேரி பஸ் நிலையத்தில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பயணிகள் கூறும்போது, ‘பஸ் சரியாக குறிப்பிட்ட நேரத்துக்கு வருவதில்லை. அதிகாரிகளை கேட்டால் சரியாக பதில் கிடையாது. நிறுத்தப்பட்ட பஸ்கள் குறித்து அறிவிப்பு பலகையில் குறிப்பிடுவது கிடையாது. மேலும் பஸ்களை மாற்றி இயக்கப்படுகின்றன’ என்றனர்.

Tags:    

Similar News