செய்திகள்
தேனி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது வழக்கு
தேனி அருகே மைனர் பெண்ணை திருமணம் செய்த வாலிபர் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டம் மல்லயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த மகேந்திரன் மகன் பிரவீன்குமார். இவருக்கும் பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணுக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இரு வீட்டு பெற்றோர் சம்மதத்துடன் நடந்த திருமணம் குறித்து குழந்தைகள் நல அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தேனி, குழந்தைகள் நல உறுப்பினர் பிரேமா விசாரணை நடத்தியதில் அந்த பெண் மைனர் என்பது தெரிய வந்தது. இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் பிரேமா புகார் அளித்தார்.
போலீசார் மைனர் பெண்ணை திருமணம் செய்த பிரவீன்குமார், அவரது தந்தை மகேந்திரன், தாய் செல்லம்மாள் மற்றும் மைனர் பெண்ணின் பெற்றோர் உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.