search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைனர் பெண் திருமணம்"

    • போக்சோவில் வழக்கு பதிவு
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது இளம்பெண். குடியாத்தம் அடுத்த கொட்டாற மடுகு நடுத்தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 21). இளம் பெண்ணும் கிருஷ்ணமூர்த்தியும் ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒரு ஆண்டாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரது வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

    இந்த நிலையில் தற்போது இளம் பெண் 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். கர்ப்பிணியாக உள்ள தனது மகளை சேம் பள்ளியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அவரது தாயார் அழைத்துச் சென்றார்.

    அங்கு இளம் பெண்ணை பரிசோதித்த டாக்டர் மைனர் பெண் கர்ப்பமாக உள்ளது குறித்து சமூக நலத் துறைக்கு தகவல் அளித்தார்.

    சமூக நலத்துறை அதிகாரிகள் இதுகுறித்து குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.

    இன்ஸ்பெக்டர் சியாமளா போக்சோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண் ஒரு வருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடக்க போவதாக வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெற்றோரிடம் திருமணம் வயது அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றம்.

    அதையும் மீறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் அங்கிருந்த மைனர் பெண்ணை அழைத்துவந்து வேலூரில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    ×