search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்
    X

    மைனர் பெண் திருமணம் தடுத்து நிறுத்தம்

    • சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்
    • கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த தென்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது மைனர் பெண் ஒரு வருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் நேற்று திருமணம் நடக்க போவதாக வேலூர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில், வேப்பங்குப்பம் போலீசார் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணின் திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெற்றோரிடம் திருமணம் வயது அடையாத பெண்ணுக்கு திருமணம் செய்து வைப்பது சட்டபடி குற்றம்.

    அதையும் மீறி யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர்.

    மேலும் அங்கிருந்த மைனர் பெண்ணை அழைத்துவந்து வேலூரில் உள்ள சிறுவர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

    Next Story
    ×