செய்திகள்

டெல்லியை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது- கமல் பேட்டி

Published On 2019-01-16 06:51 GMT   |   Update On 2019-01-16 06:51 GMT
டெல்லியைத் தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
கோவை:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-



மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும். தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
Tags:    

Similar News