செய்திகள்

எடப்பாடி அரசை கண்டித்து பாலக்கோட்டில் ஜன 3-ம் தேதி அமமுக ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-19 12:06 GMT   |   Update On 2018-12-19 12:06 GMT
தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கண்டித்து பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே ஜன 3-ம் தேதி அமமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்.
சென்னை:

தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை கண்டித்து பாலக்கோடு பேருந்து நிலையம் அருகே ஜன 3-ம் தேதி அமமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் டிடிவி தினகரன் பங்கேற்கிறார்.

இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி  பகுதிகளை செழிப்பாக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் 377 கோடி ரூபாய் மதீப்பீட்டில் கொண்டுவரப்பட்ட திட்டத்தை கிடப்பில் போட்டுள்ள எடப்பாடி பழனிசாமி அரசை கண்டித்து வரும் 03.01.2019 அன்று காலை 10.00 மணியளவில் பாலக்கோடு பேருந்து நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் கழகத்தின் சார்பில் மாபெரும்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த அறப்போராட்டத்தில் கழக துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் நானும் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.  #TTVDhinakaran
Tags:    

Similar News