செய்திகள்
வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா? - காங்கிரஸ் கட்சிக்கு தமிழிசை கேள்வி
வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா? என்று காங்கிரஸ் கட்சிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பி உள்ளார். #Results2018 #TamilisaiSoundararajan
சென்னை:
சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.
எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக் குதிப்பதும் இல்லை தோல்வியால் துவள்வதும் இல்லை. மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை; மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா?
இவ்வாறு அவர் கூறினார். #Results2018 #TamilisaiSoundararajan
சட்டசபை தேர்தல் நடைபெற்ற ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜகவிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இரண்டு கட்சிகளும் கிட்டத்தட்ட சமநிலையில் உள்ளன.
இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி தமிழக பாஜக தலைவர் தமிழிசையிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
எந்த தோல்வியும் எங்களை துவளச்செய்யாது. வெற்றியால் பாஜக துள்ளிக் குதிப்பதும் இல்லை தோல்வியால் துவள்வதும் இல்லை. மோடி அலை ஓய பெரிய தலை எதுவும் இல்லை; மோடி அலையை ஓய வைக்கவும் முடியாது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என இயந்திரத்தனமாக காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர். வாக்கு இயந்திரம் இப்போது சரியாக செயல்படுகிறதா?
இவ்வாறு அவர் கூறினார். #Results2018 #TamilisaiSoundararajan