செய்திகள்
புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தது தேமுதிக மட்டும்தான்- பிரேமலதா
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #Premalathavijayakanth
நத்தம்:
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண உதவி வழங்க நத்தம் பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா வந்திருந்தார். அங்குள்ள காந்தி கலையரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நேரடியாக நிவாரண உதவிகள் வழங்க கேப்டன் அவர்கள் ஆணையிட்டார்.
அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான். இதற்காக ரூ.1கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களது துயரத்தில் நாங்களும் பங்கேற்போம். ஆளுங்கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் மக்களை முறையாக சந்திக்கவில்லை.
அடுத்து வர இருக்கும் தேர்தலை சந்திப்பதற்காக மட்டுமே மற்ற கட்சியினர் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் தே.மு.தி.க. எப்பொழுதும் மக்களைச் சந்திக்கும் கட்சியாகும். வெறும் அறிவிப்பு அரசியலை மட்டுமே ஆளும்கட்சியினர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக அரசு செய்யவில்லை. எனவே வரும் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்த சாரதி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் லெட்சுமணன், நத்தம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஆண்டிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #GajaCyclone #Premalathavijayakanth
கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண உதவி வழங்க நத்தம் பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா வந்திருந்தார். அங்குள்ள காந்தி கலையரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நேரடியாக நிவாரண உதவிகள் வழங்க கேப்டன் அவர்கள் ஆணையிட்டார்.
அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான். இதற்காக ரூ.1கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களது துயரத்தில் நாங்களும் பங்கேற்போம். ஆளுங்கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் மக்களை முறையாக சந்திக்கவில்லை.
அடுத்து வர இருக்கும் தேர்தலை சந்திப்பதற்காக மட்டுமே மற்ற கட்சியினர் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் தே.மு.தி.க. எப்பொழுதும் மக்களைச் சந்திக்கும் கட்சியாகும். வெறும் அறிவிப்பு அரசியலை மட்டுமே ஆளும்கட்சியினர் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக அரசு செய்யவில்லை. எனவே வரும் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாநில துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்த சாரதி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் லெட்சுமணன், நத்தம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஆண்டிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #GajaCyclone #Premalathavijayakanth