செய்திகள்

வேலூர் சத்துவாச்சாரியில் ரவுடியை கல்லால் தாக்கி கொன்ற கள்ளக்காதலி

Published On 2018-11-18 12:19 GMT   |   Update On 2018-11-18 12:19 GMT
வேலூர் சத்துவாச்சாரியில் தகராறில் ரவுடியை கல்லால் தாக்கி கொன்ற கள்ளக்காதலியை போலீசார் தேடி வருகிறார்கள்.

வேலூர்:

வேலூர் சத்துவாச்சாரி மலையடிவாரம் வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). பிரபல ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான இவர் மீது 2 கொலை, கொள்ளை, வழிப்பறி உள்பட 25 வழக்குகள் உள்ளது.

சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவருக்கும் வள்ளலாரில் டிபன் கடை நடத்தி வரும் தண்டுமாரி (40) என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது.

தண்டுமாரி இந்திரா நகரில் வசித்து வந்தார். அவரது கணவர் இறந்து விட்டார். அவருக்கு போடி (20) என்பவர் உள்பட 2 மகன்கள் உள்ளனர்.

தங்கராஜ் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். எப்போதும் தண்டுமாரி வீட்டிலேயே தங்கி இருந்துள்ளார். 2 பேருக்கும் 6 ஆண்டுகளாக கள்ளக்காதல் நீடித்து வந்தது.

இந்த நிலையில் நேற்றிரவு குடிபோதையில் தங்கராஜ் தண்டுமாரி வீட்டுக்கு வந்தார். அப்போது தண்டுமாரிக்கும், தங்கராஜ்க்கும் இடையே நள்ளிரவு 1 மணியளவில் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த தண்டுமாரி, அவரது மகன் போடியுடன் சேர்ந்து தங்கராஜின் தலையில் பெரிய கல்லை தூக்கி போட்டனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தங்கராஜ் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

தங்கராஜ் இறந்ததை உறுதி செய்த தண்டுமாரி தனது மகனுடன் தலைமறைவாகி விட்டார்.

சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராஜின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி சென்ற கொலையாளிகளை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News