செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு சிறுவன் பலி

Published On 2018-11-12 04:22 GMT   |   Update On 2018-11-12 04:22 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலுக்கு 12 வயது சிறுவன் பலியானான். #Swineflu #Dengue

மதுரை:

விருதுநகர் கருப்பசாமி நகரைச் சேர்ந்தவர் ஆதி குரு. இவரது மகன் ஆதி சங்கர் (வயது12). மன வளர்ச்சி குன்றிய சிறுவன் ஆதிசங்கர் கடந்த 10 நாட் களாக காய்ச்சலால் அவதிப்பட்டான்.

மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அதிசங்கருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. டாக்டர்களின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி ஆதிசங்கர் பரிதாபமாக இறந்தான்.

பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 21 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டுகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோல் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 115 பேருக்கும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Swineflu #Dengue

Tags:    

Similar News