செய்திகள்
விஜயபாஸ்கரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்- தங்கதமிழ்செல்வன்
விஜயபாஸ்கரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தங்கதமிழ்செல்வன் கூறினார். #ThangaTamilselvan #Vijayabaskar #GutkhaScam
ஆண்டிப்பட்டி:
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடக்கிறது. இதற்கு முன்பு நடந்த சோதனைக்கே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்போது நடக்கும் சோதனை மூலமும் எந்த நடவடிக்கையும் எடுக்காது.
மக்கள் மீது அக்கறை இருந்தால் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தான் குற்றமற்றவர் என விஜயபாஸ்கர் நிரூபித்த பிறகு மீண்டும் அவரை அமைச்சராக்கலாம்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. இருக்காது என ஓ.பி.எஸ் கூறுகிறார். எங்களிடம் பண பலமோ, படை பலமோ கிடையாது. தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்ற பிறகு அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் விலகி விடுவார்களா?
தேனி மாவட்டம் கண்டமனூர், கடமலைக் குண்டு, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்றத்தை அவமதித்ததாக எங்களை குற்றம் சாட்டுகின்றனர். கூட்டுறவு சங்க தேர்தல் விஷயத்தில் நீதிமன்றம் கூறிய விதிமுறைகளை பின்பற்றாத அரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Vijayabaskar #GutkhaScam
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் ஆண்டிப்பட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
குட்கா விவகாரத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடக்கிறது. இதற்கு முன்பு நடந்த சோதனைக்கே அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால் தற்போது நடக்கும் சோதனை மூலமும் எந்த நடவடிக்கையும் எடுக்காது.
மக்கள் மீது அக்கறை இருந்தால் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தான் குற்றமற்றவர் என விஜயபாஸ்கர் நிரூபித்த பிறகு மீண்டும் அவரை அமைச்சராக்கலாம்.
திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தலுக்கு பிறகு அ.ம.மு.க. இருக்காது என ஓ.பி.எஸ் கூறுகிறார். எங்களிடம் பண பலமோ, படை பலமோ கிடையாது. தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்ற பிறகு அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலையை எங்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்கள் விலகி விடுவார்களா?
தேனி மாவட்டம் கண்டமனூர், கடமலைக் குண்டு, தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. இது குறித்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீதிமன்றத்தை அவமதித்ததாக எங்களை குற்றம் சாட்டுகின்றனர். கூட்டுறவு சங்க தேர்தல் விஷயத்தில் நீதிமன்றம் கூறிய விதிமுறைகளை பின்பற்றாத அரசு மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
இவ்வாறு அவர் கூறினார். #ThangaTamilselvan #Vijayabaskar #GutkhaScam