செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு- ரூ.23 ஆயிரத்தை நெருங்கியது

Published On 2018-08-28 07:14 GMT   |   Update On 2018-08-28 07:14 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.22,888-க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னை:

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. கடந்த 20-ந்தேதி ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 488 ஆக இருந்தது. பின்னர் விலை அதிகரித்து நேற்று முன்தினம் பவுன் ரூ.22 ஆயிரத்து 888-க்கு விற்றது. நேற்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.22 ஆயிரத்து 848 ஆக இருந்தது.

இன்று பவுனுக்கு ரூ.120 உயர்ந்தது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 968 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.2,871-க்கு விற்கிறது. இதன் மூலம் ஒரு பவுன் தங்கம் விலை மீண்டும் ரூ.23 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதும், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதும் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.40 ஆயிரத்து 400 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.40.40-க்கு விற்கிறது.
Tags:    

Similar News