விஜயகாந்த் நலம் பெற வியாசர்பாடி கோவிலில் யாகம்
பெரம்பூர்:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக நாளை அமெரிக்கா செல்கிறார்.
விஜயகாந்த் முழுமையாக உடல்நலம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் வியாசர்பாடி ஈஸ்வரன் கோவிலில் சிறப்பு யாகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி இன்று புத்ரினா ஜெய ஹோமம் நடந்தது.
புரோகிதர்கள் நெருப்பு குண்டம் வளர்த்து மந்திரம் ஓதினார்கள். காலை 9 மணிக்கு தொடங்கிய இந்த யாகம் மதியம் வரை நடந்தது.
தே.மு.தி.க . துணை பொதுச் செயலாளர் எல்.கே. சுதீஷ் இதில் கலந்து கொண்டு பயபக்தியுடன் வழிபட்டார். வடசென்னை மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் மதிவாணன் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.
தே.மு.தி.க. முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, யு.சந்திரன் உள்பட 500-க்கும் அதிகமான தே.மு.தி.க.வினர் கலந்து கொண்டு விஜயகாந்த் நலம்பெற வேண்டுதல் செய்தனர். #Vijayakanth