செய்திகள்

தேனியில் மருந்து கடையில் பிரசவம் பார்த்த போலி டாக்டர்

Published On 2018-06-13 07:10 GMT   |   Update On 2018-06-13 07:10 GMT
தேனியில் மருந்து கடையில் பிரசவம் பார்த்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி கே.ஆர்.ஆர். நகரைச் சேர்ந்தவர் தர்மா (வயது 45). டி.பார்ம் படித்துள்ள இவர் தேனி பங்களா மேடு பகுதியில் மெடிக்கல் கடை வைத்துள்ளார். அங்கு மருந்து வாங்க வருபவர்களிடம் மூளைச் சலவை செய்து அவரே சொந்தமாக சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

மேலும் ஒரு சில பெண்களுக்கு பிரசவமும் பார்த்துள்ளார். இவரிடம் மருந்து வாங்கி சாப்பிட்ட ஒரு சிலருக்கு உடலநலக் கோளாறு அதிகமனதால் தேனி மருத்துவத்துறைக்கு புகார் அளித்தனர்.

அதன் பேரில் வீரபாண்டி வட்டார ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மணிகண்டன் தலைமையில் அதிகாரிகள் தர்மாவின் மெடிக்கல் கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அங்கு நோயாளிகளுக்கு போடப்பட்ட ஊசிகள், வழங்கப்பட்ட மருந்து மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மருத்துவ அலுவலர் மணிகண்டன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News