செய்திகள்

தேனி அருகே அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-05-16 05:25 GMT   |   Update On 2018-05-16 05:25 GMT
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்தை கண்டித்து உத்தமபாளையத்தில் மருத்துவ சமூக நல சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #MinisterCVShanmugam

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் புறவழிச்சாலையில் தமிழ்நாடு மருத்துவ சமூக நல சங்கத்தினர் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவர் சமூக நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் திருமலைராஜ் முன்னிலை வகித்தார்.

அ.தி.மு.க. கட்சி கூட்டத்தில் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம் மருத்துவர் சமூகத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோ‌ஷம் எழுப்பினர்.

நிர்வாகிகள் போஸ், பாலு உள்பட முடி திருத்தும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் தான் தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் வரை தங்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்தனர். #MinisterCVShanmugam

Tags:    

Similar News