செய்திகள்

காரமடை அருகே வி‌ஷம் குடித்து மாணவி தற்கொலை

Published On 2018-04-17 11:26 GMT   |   Update On 2018-04-17 11:43 GMT
காரமடை அருகே வி‌ஷம் குடித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்வம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள சிக்காரம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் வானதி (வயது 16). இவர் பிரஸ்காலனியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று தேர்வுக்கு சென்ற வானதி செல்போனை கையில் எடுத்து சென்றார். இதனை பார்த்த ஆசிரியை செல்போனை பிடுங்கி வைத்துக் கொண்டார். தேர்வு முடிந்ததும் வானதி வீட்டுக்கு திரும்பினார். அவரிடம் தாய் ஜோதிமணி செல்போனை எங்கே என்று கேட்டு திட்டி உள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த வானதி வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் வானதி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News