செய்திகள்

ஜெயலலிதாவின் ஆசியோடு தமிழகத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது- ரத்தினவேல் எம்.பி.

Published On 2018-02-20 10:33 GMT   |   Update On 2018-02-20 10:33 GMT
தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு நல்லாட்சி நடந்து வருகிறது என ரத்தினவேல் எம்.பி. கூறியுள்ளார்.
தொட்டியம்:

திருச்சி புறநகர்மாவட்டம் தொட்டியம் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் விழா ஆலோசனைக்கூட்டம் திருச்சி புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரத்தின வேல் எம்.பி. தலைமையில் நடைபெற்றது. முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.செல்வராசு முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் எம்.பி. தொட்டியம் ஒன்றியத்தில் புதியதாக உறுப்பினர்கள் சேர்க்கைக்கான படிவங்களை வழங்கி சிறப்புரை யாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆசியோடு நல்லாட்சி நடந்து வருகிறது. மேலும் அவரது 70-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும். பெண்களுக்கு இந்தியாவில் வேறு எந்த முதலமைச்சரும் செய்யமுடியாத வகையில் ஸ்கூட்டி வழங்கும் திட்டத்தை கொண்டுவந்து அதை வருகின்ற 24-ந்தேதி அவரது பிறந்தநாளில் பிரதமரின் கையால் தொடங்கி வைக்க உள்ளோம். மேலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் வர உள்ளது. அதில் கட்சி நிர்வாகிகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளது. எனவே அனை வரும் ஒற்றுமையுடன் கட்சி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பால்மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், நெடுமாறன், லட்சுமிதங்கவேல், ஒன்றிய துணைச்செயலாளர் வக்கீல் செந்தில்குமார், இணைச்செயலாளர் சுபத்ரா சசிக்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச்செயலாளர் ஏழூர்பட்டி தங்கதமிழ் செல்வன், முன்னாள் ஒன்றியக் குழுத்துணைத்தலைவர் அண்ணாதண்டபாணி, நகர செயலாளர்கள் தொட்டியம் திருஞானம், ஒன்றிய இலக்கிய அணி துணைத்தலைவர் ஏழூர்பட்டி மில்க் சரவணன், காட்டுப்புத்தூர் நகர பேரவை செயலாளர் ராமச்சந்திரன், கட்சி நிர்வாகிகள் வாள் வேல்புத்தூர் ராஜேந்திரன், கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், ஊராட்சி செயலாளர் முருகேசன், தொட்டியம் நகர பாசறை செயலாளர் கேபிள் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews
Tags:    

Similar News