செய்திகள்
கொலை செய்யப்பட்ட ரஞ்சித்

நுங்கம்பாக்கம் கல்லூரி மாணவர் கொலையில் வீடியோ ஆதாரம் சிக்கியது

Published On 2018-01-21 07:35 GMT   |   Update On 2018-01-21 07:35 GMT
நுங்கம்பாக்கத்தில் ஐ.டி.ஐ. மாணவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை:

நுங்கம்பாக்கத்தில் இருந்து மீஞ்சூர் சென்ற ரஞ்சித் நள்ளிரவில் மின்சார ரெயிலில் வீட்டுக்கு திரும்பிய போது வீட்டு அருகில் வைத்து கொலையாளிகள் அவரை தீர்த்துக் கட்டியது தெரியவந்தது.

நுங்கம்பாக்கம் போலீசார் தனிப்படைகளை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். ரஞ்சித் கொலை செய்யப்பட்ட பகுதியில் வீடியோ கேமராக்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது.

கண்காணிப்பு கேமரா ஒன்றை ஆய்வு செய்ததில் கொலையாளிகள் ரஞ்சித்தை துரத்தும் வீடியோ காட்சிகள் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

காதல் தகராறில் ரஞ்சித் கொலை செய்யப்பட்டிருப்பதால் அந்த கோணத்திலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. வாலிபர் ஒருவர் ரஞ்சித்தை போனில் மிரட்டும் ஆடியோ ஆதாரமும் சிக்கியுள்ளது. அதை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது தொடர்பாக வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கி உள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #Tamilnews
Tags:    

Similar News