செய்திகள்
முத்தலாக் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன்
முத்தலாக் சட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அவனியாபுரம்:
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஒக்கி புயல் பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்தது.
தற்போது பிறந்துள்ள 2018-ம் ஆண்டை அமைதி சூழ்ந்த இந்தியாவாக ஏற்படுத்த வேண்டும்.
முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. எனவே மத்திய அரசு அதை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோ இருந்தபோது ரஜினியின் பின்னணியில் இருந்தார். அவர் அரசியலில் முழுவதுமாக இறங்கிய பின் தான் அவரது செயல்பாட்டை கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் சென்னையில் இன்று விமானம் மூலம் மதுரை வந்தார்.
விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2017-ம் ஆண்டு தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், ஒக்கி புயல் பாதிப்பு போன்ற பல்வேறு இன்னல்களை சந்தித்தது.
தற்போது பிறந்துள்ள 2018-ம் ஆண்டை அமைதி சூழ்ந்த இந்தியாவாக ஏற்படுத்த வேண்டும்.
முத்தலாக் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது. எனவே மத்திய அரசு அதை மீண்டும் மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
ரஜினிகாந்தின் அரசியல் அறிவிப்பின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. சோ இருந்தபோது ரஜினியின் பின்னணியில் இருந்தார். அவர் அரசியலில் முழுவதுமாக இறங்கிய பின் தான் அவரது செயல்பாட்டை கூற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.