search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "urges"

    வாக்காளர்கள் ‘கிச்சடி’ (எதிர்க்கட்சிகள் இணைந்த) அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டாம் என பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசியுள்ளார். #PMModi #Khichdi #BJP
    அசம்கார்:

    உத்தரபிரதேச மாநிலம் அசம்கார் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

    வாக்காளர்கள் ‘கிச்சடி’ (எதிர்க்கட்சிகள் இணைந்த) அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டாம். கிச்சடி அரசாங்கம் குறித்து மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணிக்கு வாக்களிப்பது ஆபத்து நிறைந்தது.

    எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு வாக்களிப்பது அராஜகம், நிலையற்றதன்மை ஆகியவற்றுக்கு முன்னெடுத்துச் செல்வதுடன், நாடு பாதுகாப்பற்றதாக மாறிவிடும். முந்தைய கூட்டணி அரசுகள் 2ஜி உள்பட பல்வேறு ஊழல்களில் எப்படி மூழ்கின என்பதை நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கிறீர்கள்.

    உங்கள் வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, ஒருங்கிணைந்து மத்தியில் ஒரு வலிமையான அரசாங்கம் அமைய வாக்களிக்க வேண்டும்.

    முன்பு அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் அசம்காருடன் தொடர்பு இருந்தது. 2014-ம் ஆண்டுக்கு பின்னர் என்ன நடந்தது என்பதை நீங்கள் அனைவரும் பார்க்கிறீர்கள். 2014-ம் ஆண்டுக்கு முன்பு நாட்டில் தொடர்ந்து பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் இது நிறுத்தப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு யார் பொறுப்பு என்பது அனைவருக்கும் தெரியும்.

    இப்போது காஷ்மீர் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் பயங்கரவாத நடவடிக்கைகள் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது. நமது அரசு தேசநலனுக்கு முன்னுரிமை கொடுத்தது தான் காரணம். நாம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாதிகளை தாக்கியுள்ளோம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.  #PMModi #KhichdiGovernment #BJP
    கோரிக்கைகளை வலியுறுத்தி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    குளித்தலை:

    எல்.ஐ.சி. பாலிசி பிரிமியத்திற்கான ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும். பாலிசி தாரர்களுக்கான போனஸ்சை உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி. முதலீட்டை நலிவடைந்த வங்கிகளில் முதலீடு செய்வதை தவிர்க்கவேண்டும். காலாவதியான பாலிசிகளை புதுப்பித்தலுக்கான காலவரை யறையை 2 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டாக மாற்ற வேண்டும். ஐ.ஆர்.டி.ஏ. அனுமதித்துள்ள அளவிற்கு முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க எல்.ஐ.சி. நிர்வாகம் நட வடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1-ந் தேதி எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.

    மேலும் அன்றிலிருந்து ஒருவாரம் கருப்பு பட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் போராட்டத்தின் இறுதிநாளான நேற்று மீண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குளித்தலை எல்.ஐ.சி. கிளை அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். இதில் எல்.ஐ.சி. முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். 
    இந்தியாவை போல் ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூரிலும் கோரிக்கை வலுத்து வருகிறது. #Section377 #SupremeCourt
    சிங்கப்பூர்:

    இந்தியாவில் இயற்கைக்கு மாறாக ஆண்களோ, பெண்களோ ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவது குற்றமாக கருதப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறியது. மேலும், ஓரினச் சேர்க்கையை குற்றச் செயலாக கருதும் சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பினை வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக கருதி, ஓரினச் சேர்க்கையாளர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், இந்தியாவை போல் ஓரின சேர்க்கைக்கு அங்கீகாரம் அளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிங்கப்பூரிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

    இதுதொடர்பாக சிங்கப்பூர் தூதர் மற்றும் வக்கீலாக உள்ள டாமி கோ என்பவர் தனது சமூக வலைதளத்தில் கூறுகையில், இந்தியாவை போல் ஓரினச் சேர்க்கைக்கு அங்கீகாரம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக ஓரினச் சேர்க்கை சமூகத்தினர் சட்டப்பிரிவு 377 ஏ-ஐ எதிர்த்து வழக்கு தொடர வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    மேலும், கடந்த 2016-ம் ஆண்டில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கு தோல்வி அடைந்துள்ளது என மற்றொருவர் பதிவிட்டதற்கு, மீண்டும் முயற்சிக்க வேண்டும் என டாமி கோ பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Section377 #SupremeCourt
    மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.#PMK #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ள 800-க்கும் கூடுதலான அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மாணவர்களின் இடை நிற்றலைக் கட்டுப்படுத்த அதிக எண்ணிக்கையில் புதிய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்து வரும் நிலையில் அரசின் இந்த முடிவு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் போதிய அளவில் சேராததற்கு அரசாங்கம் தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாலும், கட்டமைப்பு வசதிகள் போதிய எண்ணிக்கையில் இல்லாததாலும் தான் பெற்றோர் தங்களின் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர்.

    தமிழகத்திலுள்ள பல அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக இருந்தாலும் கூட, அரசு பள்ளிகள் என்றால் அங்கு கல்வித் தரமாக இருக்காது என்ற தவறான எண்ணம் கடந்த 25 ஆண்டுகளாக மக்களின் பொதுப்புத்தியில் பதிவாகி விட்டது. இந்த மாயையை அகற்றவும், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு எதுவும் செய்யவில்லை.

    ஒரு மாணவர் கூட இல்லாத அரசு பள்ளிகள், பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அரசு பள்ளிகள் அமைந்துள்ள இடங்களில் தனியார் பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. ஆனால், அவற்றில் இடம் கிடைக்காது என்று கூறும் அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அதற்குக் காரணம் அந்த பள்ளிகளில் போதிய அளவில் ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இருப்பது தான். அதே போன்ற வசதிகள் அரசு பள்ளிகளில் இருந்தால் அங்கும் மாணவர்கள் அதிகமாக சேருவார்கள். அவ்வாறு செய்ய ஆட்சியாளர்கள் தவறியதால் தான் அரசு பள்ளிகளில் போதிய அளவில் மாணவர்கள் சேரவில்லை. அரசு பள்ளிகளின் இன்றைய நிலைக்கு அரசு தான் காரணம் என்னும் நிலையில், அந்த பள்ளிகளை மூடி மாணவர்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயம்?

    5 வயது நிறைந்த அனைத்துக் குழந்தைகளும் தொடக்கப் பள்ளியில் சேருவதை உறுதி செய்ய, அருகமைப் பள்ளி தத்துவத்தின்படி, ஒவ்வொரு குடியிருப்பிலும் ஓர் அரசுப் பள்ளி இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால், இப்போது ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தான் உள்ளது. இந்த நிலையை மாற்ற இன்னும் கூடுதலாக அரசுத் தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்பட வேண்டிய நிலையில், இருக்கும் பள்ளிகளையும் மூடத் துடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

    ஊரகப்பகுதிகளில் மேல்நிலை வகுப்புகளில் 30க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள், நகர்ப்பகுதிகளிலும், ஆங்கில வழிக் கல்வி முறையிலும் 15க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடப்பிரிவுகள் ஆகியவற்றை மூடவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழக அரசின் இந்த திட்டங்கள் செயல்வடிவம் பெற்றால் கிராமப்புற மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பறிக்கப்பட்டுவிடும். இது அனைவருக்கும், அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டும் என்ற இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை நோக்கத்திற்கு எதிரானது ஆகும். இந்த அநீதியை அனுமதிக்க முடியாது.

    எனவே, மாணவர்கள் இல்லாததையும், மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதையும் காரணம் காட்டி 800 தொடக்கப் பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். மாறாக, அந்த பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமித்தல் ஆகியவற்றின் மூலம் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #PMK #Ramadoss
    ×