செய்திகள்

ஒட்டன்சத்திரத்தில் இருந்து ரெயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2017-12-15 11:09 GMT   |   Update On 2017-12-15 11:09 GMT
ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளாவிற்கு ரெயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் அருகே ஒட்டன்சத்திரத்தில் இருந்து திருச்செந்தூர்- பாலக்காடு செல்லும் பயணிகள் ரெயிலில் அரிசி கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் அதிகாரி செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து செல்வி தலைமையிலான அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் ரெயில் நிலையத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதிகாரிகள் வருவதை அறிந்த கடத்தல் கும்பல் ரேசன் அரிசியை ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு தப்பி சென்றனர்.

அதிகாரிகள் அந்த சாக்கு மூட்டைகளை சோதனையிட்டபோது 31 பிளாஸ்டிக் சாக்குகளில் 767 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அவற்கை கைப்பற்றிய அதிகாரிகள் ஒட்டன்சத்திரம் சேமிப்பு கிடங்கில் ஒப்படைத்தனர்.

இந்த அரிசியை கடத்தி வந்த கும்பல் குறித்தும் எங்கு விற்பனை செய்ய கொண்டு சென்றார்கள்? என்பது குறித்தும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News