செய்திகள்

கொடைரோடு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2017-12-09 17:25 GMT   |   Update On 2017-12-09 17:25 GMT
கொடைரோடு அருகே திருமணமான 6 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடைரோடு:

கொடைரோடு அருகேயுள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் கருப்பு. அவருடைய மகள் சபிதா (வயது 19) என்பவருக்கும் மதுரையை சேர்ந்த முருகன் மகன் அகிலேஷ் கணேஷ் (வயது 23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்தனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி இருவரும் பிரிந்தனர். அதன்பிறகு சபிதா பள்ளபட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். திருமண வாழ்க்கை கசந்து போனதால் சபிதா மனமுடைந்து காணப்பட்டார்.

இதனால் அவர் தற்கொலை செய்ய முடிவு செய்து, நேற்று முன்தினம் கொசு மருந்தை (வி‌ஷம்) குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்மையநாயக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் சபிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சபிதாவுக்கு திருமணம் முடிந்து 6 மாதங்களே ஆவதால் திண்டுக்கல் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
Tags:    

Similar News