செய்திகள்
மன்னார்குடி அருகே குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை
குளத்தில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். ஆசிரியராக உள்ளார். இவரது மகன் ஹரீஸ்கார்த்திக் (வயது20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியர் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குள பகுதிக்கு சென்ற ஹரீஸ்கார்த்திக் நீண்டநேரம் அங்கு அமர்ந்திருந்தாராம். பின்னர் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதியினர் இதுபற்றி மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரீஸ்கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
மன்னார்குடி பத்மசாலவர் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர். ஆசிரியராக உள்ளார். இவரது மகன் ஹரீஸ்கார்த்திக் (வயது20). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியர் என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலை மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குள பகுதிக்கு சென்ற ஹரீஸ்கார்த்திக் நீண்டநேரம் அங்கு அமர்ந்திருந்தாராம். பின்னர் அவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அப்பகுதியினர் இதுபற்றி மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ஹரீஸ்கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.