செய்திகள்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி மறைவு: ஸ்டாலின், வைகோ இரங்கல்
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளரான மேலாண்மை பொன்னுச்சாமி (66) மறைவுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர்:
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளரான மேலாண்மை பொன்னுச்சாமி (66) மறைவுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர் பொன்னுச்சாமி. குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத இவர் நூல்களை வாசிப்பதை விருப்பமாக கொண்டிருந்தார். இலக்கிய நூல்களை தேடித்தேடி படித்த இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு இவர் எழுதிய மின்சாரப் பூ என்ற சிறுகதை தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை வென்றது. தனது ஊரின் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என்று அறியப்படுகிறார். 66 வயதான இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதை எழுத்தாளரான மேலாண்மை பொன்னுச்சாமி (66) மறைவுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் மேலாண்மறைநாடு என்ற கிராமத்தில் 1951-ம் ஆண்டு பிறந்தவர் பொன்னுச்சாமி. குடும்ப வறுமை காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாத இவர் நூல்களை வாசிப்பதை விருப்பமாக கொண்டிருந்தார். இலக்கிய நூல்களை தேடித்தேடி படித்த இவர் சிறுகதைகளை எழுதியுள்ளார்.
கடந்த 2007-ம் ஆண்டு இவர் எழுதிய மின்சாரப் பூ என்ற சிறுகதை தொகுப்பு சாகித்ய அகாடமி விருதை வென்றது. தனது ஊரின் பெயரையும் சேர்த்து மேலாண்மை பொன்னுச்சாமி என்று அறியப்படுகிறார். 66 வயதான இவர் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
இவரது மறைவுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.