செய்திகள்

தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது

Published On 2017-09-20 09:22 GMT   |   Update On 2017-09-20 09:22 GMT
கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே தங்கையை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன் பாளையம் அருகே உள்ள கோவனூர் எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் இந்திரன்(வயது 19). தொழிலாளி.

இவரது சித்தி மகள் 8-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவிழாவுக்காக மாணவி தனது பெரியம்மா வீடான இந்திரன் வீட்டுக்கு சென்றார். அப்போது இந்திரன் மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி கர்ப்பமானாள். ஆனால் அதை குடும்பத்தினரிடம் கூற வில்லை. சம்பவத்தன்று மாணவி வயிற்றுவலியால் அவதிப்படவே குடும்பத்தினர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அப்போது மாணவி 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கிடையே மாணவியின் உடல்நிலை காரணமாக கர்ப்பம் கலைக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குப்பதிவு செய்து இந்திரனை கைது செய்தார்.

அவர் மீது பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை தடுப்பு சிறப்பு சட்டம் 2012 மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவி கோவை அரசு ஆஸ்பத்திரியில் இருக்கிறார். அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. இதேபோல கோர்ட்டு அனுமதி பெற்று இந்திரனின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ. பரிசோதனைக்காக சென்னையில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இந்திரன் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Tags:    

Similar News