செய்திகள்

பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருட்டு

Published On 2017-09-18 07:18 GMT   |   Update On 2017-09-18 07:18 GMT
பொன்னேரி பேரூராட்சி அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பொன்னேரி:

பொன்னேரி பேரூராட்சி அலுவலகம் திருஆயர் பாடி பகுதியில் உள்ளது. நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் அலுவலகத்துக்கு வந்த போது கதவு பூட்டு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து பொன்னேரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள், மின் மோட்டார் மற்றும் முக்கிய ஆவணங்கள் திருடு போய் இருப்பது தெரிந்தது. மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமிராவும் உடைக்கப்பட்டு இருந்தது.

நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள் பைப் வழியாக பேரூராட்சி அலுவலக கட்டிடத்தின் மேலே ஏறி உள்ளனர். பின்னர் அங்கிருந்த கதவை உடைத்து புகுந்து கைவரிசை காட்டி இருக்கிறார்கள்.

அங்கிருந்த மற்றொரு கேமிராவை ஆய்வு செய்த போது, முகமூடி அணிந்த ஒருவரின் முகம் மட்டும் பதிவாகி இருந்தது. இதனை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News