செய்திகள்
கடையம் அருகே இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் விசாரணைக்கு பயந்து தற்கொலை
கடையம் அருகே இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர், போலீசார் விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
கடையம்:
கடையம் அருகே உள்ள கல்யாணி புரத்தை சேர்ந்தவர் கல்பனா (வயது25). இவர் இன்று காலை வழக்கம் போல 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர் அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். காயம் அடைந்த கல்பனா நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த சரவணன் (28) என்பவர் கல்பனாவை பெண் கேட்டு சென்ற போது அவரது தந்தை மறுத்ததால் ஆத்திரம் அடைந்து கல்பனாவை வெட்டியது தெரியவந்தது.
இதையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் சரவணன் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் விரைந்து சென்று சரவணன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.